கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய சமாதான பேரவையின் செயலமர்வு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட செயலகத்தில் தேசிய சமாதான பேரவையின் 'நிலைமாற்றத்திற்கான நீதி' செயலமர்வு இன்று (01.08.2024) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
நீதி மற்றும் பொறுப்பு கூறுவதற்கான மக்கள் ஒன்றிணைவு (PUJA) செயற்றிட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளுக்கான மாவட்ட அளவிலான தகவல் அமர்வாக குறித்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த செயலமர்வு நடைபெற்றது. இச் செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெகான் பெரேரா இணையவழி செயலி ஊடாக கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
மேலும், இதன் வளவாளராக நீதி மற்றும் பொறுப்பு கூறுவதற்கான மக்கள் ஒன்றிணைவு (PUJA) செயற்றிட்டத்தின் முகாமையாளர் சட்டத்தரணி என்.விஜயகாந்தா கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர், உதவி பிரதேச செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களங்களில் மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |