யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் புத்தக கண்காட்சி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நாற்பதுக்கும் மேற்பட்ட காட்சியறைகளில் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், பெரியோர்கள் என அனைவருக்கும் ஏற்றவகையிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.
இலங்கையிலிருந்து மட்டுமல்லாது இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் வெளிவந்த புத்தகங்கள் பல்வேறு புத்தக விற்பனை நிறுவனங்களின் காட்சியறைகளில் வைக்கப்படவுள்ளன.
அத்துடன், புத்தகங்களுக்கான விசேட விலைக் கழிவுகளும் வழங்கப்படவுள்ளன.
கலை நிகழ்ச்சிகள்
எழுத்தாளர்கள், வெளியீட்டகத்தார் மற்றும் வாசகர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் இந்தப் புத்தகத்திருவிழாவில் கிடைக்கவுள்ளது.
அதேவேளை, புத்தகத் திருவிழா இடம்பெறும் மூன்று தினங்களும் மாலையில், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்வுகள், நாடகங்கள் மற்றும் புத்தக அரங்க நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |