இலங்கையில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம்!
இலங்கையில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைவு இடைநிறுத்தப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு இராச்சிய வதிவிட அனுமதி வைத்திருக்கும் பயணிகள் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இதற்காக அவர்கள் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த விலக்குகள் பொருந்தும்.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்த விலக்குகளின் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
