எரிபொருளை ஏற்றிச் செல்லும் கொள்கலன் வண்டிகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து
கொழும்பு பம்பலப்பிட்டி மெரைன் டிரைவ் பகுதியில் தனி நபர் ஒருவருக்கு கலன்களில் எரிபொருளை வழங்கிய எரிபொருள் விநியோக கொள்கலன் வண்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விநியோகத்தில் ஈடுபடும் குழுவினர் நெறிமுறையற்ற தவறான வழியில் ஈடுபடுவது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனம் கவலையை வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட விநியோக வண்டி உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை சட்டவிரோதமான முறையில் எரிபொருளை இறக்கியமை சம்பந்தமாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள மூன்று சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் எரிபொருளை எடுத்துச் செல்லும் மூன்று கொள்கலன் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 6 மணி நேரம் முன்

முதலில் தவறிய வாய்ப்பு..பின் கோல்கீப்பரிடம் மாயாஜாலம் செய்து கோல் அடித்த மெஸ்சி..PSG வெற்றியால் ஆர்ப்பரித்த மைதானம் News Lankasri

மூக்கு, தாடை எலும்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் நடிகர் விஜய்ஆண்டனி! தற்போது இவரின் நிலை என்ன? Manithan

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam

மெஸ்சி அடித்த கோலை மறுத்த நடுவர்! இருமுறை பெனால்டிகளை தவறவிட்ட எம்பாப்பே..அதிர்ச்சியடைந்த PSG ரசிகர்கள் News Lankasri
