எரிபொருள் விநியோகத்தில் புதிய முறைமை
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் துறைகள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் படி வாரத்திற்கு இரு முறை எரிபொருள் வழங்கும் புதிய முறைமையொன்றை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை சேவைகள் தனியார் ஊழியர்களின் போக்குவரத்து சேவைகள் மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகியவற்றுக்கும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,