எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழப்பு-செய்திகளின் தொகுப்பு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 90 வீதமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் செயலிழந்துள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரப்படும் எரிபொருள் உரிய முறையில் கிடைப்பதில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டப்ளியூ.எஸ்.பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகித்துள்ளதுடன் 80 எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மட்டுமே எரிபொருளை ஏற்றிச் செல்ல கொள்கலன் வண்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என தனியார் எரிபொருள் கொள்கலன் வண்டி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் 150 முதல் 200 எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்ல சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 16 மணி நேரம் முன்
மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ Cineulagam