எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழப்பு-செய்திகளின் தொகுப்பு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 90 வீதமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் செயலிழந்துள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரப்படும் எரிபொருள் உரிய முறையில் கிடைப்பதில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டப்ளியூ.எஸ்.பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகித்துள்ளதுடன் 80 எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மட்டுமே எரிபொருளை ஏற்றிச் செல்ல கொள்கலன் வண்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என தனியார் எரிபொருள் கொள்கலன் வண்டி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் 150 முதல் 200 எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்ல சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
