எரிபொருள் தட்டுப்பாடு: ஐரோப்பிய மத்திய வங்கி எச்சரிக்கை
ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தடையின் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்தே, யூரோ மண்டலத்தின் முறையான பணவியல் கொள்கை அமையும் என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கை வகுப்பாளர் யானிஸ் ஸ்டர்னாராஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய எரிசக்தி விலை உயர்வு தற்காலிகமானதாக இருந்தால், பணவியல் கொள்கையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படாது.
வட்டி விகித உயர்வு
இருப்பினும், எரிசக்தி விலை உயர்வு நீண்ட காலத்திற்கு நீடித்து, அது நடுத்தர கால பணவீக்க எதிர்பார்ப்புகளையும் ஊதிய வளர்ச்சியையும் பாதிக்கும் பட்சத்தில், கடுமையான பணவியல் கொள்கை நடவடிக்கைகள் (வட்டி விகித உயர்வு போன்றவை) தவிர்க்க முடியாததாக இருக்கும்.

கிரேக்க மத்திய வங்கியின் ஆளுநராகவும் இருக்கும் ஸ்டர்னாராஸ், மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவுறுத்தல்