யாழில் மீண்டும் எரிபொருள் வரிசை!
யாழ்ப்பாணம் – வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம்யில் எரிபொருள் பெற காத்திருந்த மக்கள், எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (03.03.2026) இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தட்டுபாடு
அதிகாலையிலிருந்து வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பிற்பகல் 1 மணிக்கு பின்னரே எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு வரப்பட்டதாகவும், அதனால் நீண்ட வரிசை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக, ஒரு வரையறை இன்றி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதால், இரவு 7:45 மணியளவில் எரிபொருள் முடிந்து விட்டதாக எரிபொருள் நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam