நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
நாட்டில் எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.ஓ.சீ அல்லது இந்தியன் லங்கா இந்தியன் ஒயில் கோர்பிரேசன் நிறுவனத்தினால் விற்பனை செய்யும் எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
