எரிபொருள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நபர் கைது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கமொன்றின் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் தொழிற்சங்கங்களில் ஒன்றான ஜாதிக சேவக சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவினரால் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து விசாரணை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வெளியிடப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam