இலங்கைக்கு விரையவுள்ள ஏழு எரிபொருள் கப்பல்கள்: நாடாளுமன்றத்தில் தகவல்
ஏழு எரிபொருள் கப்பல்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களால் எதிர்க்கட்சி குழப்பத்தில்
இவை அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள். 40 ஆயிரம் மொற்றி தொன் டீசல் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் வரும். கழிவு எண்ணெயை ஏற்றிய கப்பல் 10 ஆம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடையில் வரும். மற்றுமொரு டீசல் கப்பல் 19 ஆம் திகதி வருகிறது.
13 ஆம் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் பெட்ரோல் கப்பல் ஒன்று வருகிறது. 15 ஆம் திகதி கச்சாய் எண்ணெய் கப்பல் வருகிறது. அதே தினத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் டீசல் கப்பல் ஒன்றும் வருகிறது.
22 ஆம் திகதியும் எரிபொருள் கப்பல் வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டங்களை செய்து விடுவார்கள் என்று தற்போது எதிர்க்கட்சியினர் குழம்பி போயுள்ளனர்.
ஆத்திரத்தை தூண்டுபவர்கள் உருப்பட மாட்டார்கள்
இதனை செய்த, அவர்களில் கதை முடிந்து விடும் என்பதே இதற்கு காரணம். நாங்கள் எப்படியாவது இதனை செய்து முடிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் கொள்ளையடிப்பவன் எவனாவது இருந்தால், அவன் மீது மழையில்லாத இடி விழ வேண்டும்.
போராட்டத்திற்குள் நெருக்கடியை கொண்டு சென்று ஆத்திரத்தை தூண்டுகின்றனர். அப்படி செய்வர்கள் உருப்பட மாட்டார்கள். அரசாங்கத்தை வீழ்த்தி எவருக்கும் எதனையும் சாதிக்க முடியாது.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இல்லையென்றால், இந்த நாட்டை மீட்க முடியாது எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்... இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி News Lankasri

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ Cineulagam

லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்... காணச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan
