எரிபொருள், எரிவாயு தட்டுப்பாட்டினால், மனித உரிமை மீறல்! அரசாங்கத்துக்கு அழுத்தம்!
நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியின் விளைவாக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், எரிசக்தி அமைச்சு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்து, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வரிசையில் நிற்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறுவன மட்டத்தில் தீர்வுகளை ஆராயுமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை வகுக்கவேண்டும். அத்துடன் அவசரமான தேவை என்பதை கருதி பிரச்சினைக்கு தீர்வுகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.


ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri