முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு
முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், தனியாகப் பிரிந்து வந்து முன்னிலை சோசலிசக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியொன்றை ஆரம்பித்தார்.
அக்கட்சி இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
மாநகர சபை
இந்நிலையில், வாக்களிப்பின் பின்னர் வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் முன்னிலை சோசலிசக் கட்சியில் இருந்து கேகாலை மாநகர சபைக்கு ஒரு மக்கள் பிரதிநிதி தெரிவாகியள்ளார்.
கேகாலை மாநகர சபைக்கான தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி 272 வாக்குகளைப் பெற்று இந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அதன் பிரகாரம் கேகாலை மாநகர சபையில் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்கு தேர்தல் மூலம் முதலாவது மக்கள் பிரதிநிதி தெரிவாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
