உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம்: டக்ளஸ் தேவானந்தா

Douglas Devananda May Day Sri Lanka Economic Crisis
By Kanamirtha May 01, 2022 06:21 AM GMT
Report

சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும் சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழ, தமிழர் தேசம் தலை நிமிர, உழைக்கும் மக்களின் வாழ்வு விடிய, உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தனது மேதின வாழ்த்து செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் அவ்வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று உழைப்பவர் தினம், உழைக்கும் மக்கள் உரிமை கேட்டெழுந்து தமதுரிமை பெற்று தலை நிமிர்ந்த நாள். உலக உழைக்கும் மக்களே, ஒடுக்கப்படும் தேச மக்களே, ஒன்று படுங்கள் என்ற அறை கூவலை ஏற்று, தமிழர் தேசத்தின் விடியலுக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் உறுதி கொண்டு அன்றே எழுந்து நின்றவர்கள் நாம்.

புலித்தலைமையின் தனித்தலைமை வெறியாட்டத்தில் எமது நீதியான உரிமை போராட்டம் திசை மாறி அழிவு யுத்தமாக மாறிச்சென்ற அவல நிலையில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாகத் தேசிய நல்லிணக்க பாதையைத் தெரிவு செய்தவர்கள் நாம்.

ஆனாலும், இலங்கை - இந்திய ஒப்பந்த நடைமுறைகளில் நாம் பங்கெடுத்தவர்கள் அல்ல, பாதை மாறினாலும், எமது பயணம் நின்றுவிடவில்லை. எந்த இலட்சியக் கனவுகளுக்காக அன்று நாம் போராடியிருந்தோமோ, அதே இலட்சியக் கனவுகளுக்காக, அரசியல் அதிகாரங்களை வென்றெடுப்பதன் ஊடாக, அரசுடன் பேசி தீர வேண்டிய பிரச்சினைகள் பலவற்றையும் நாம் போதிய அரசியல் பலமின்றியே முடிந்தளவு தீர்த்து வைத்து வருகின்றோம்.

உழைக்கும் மக்களின் உரிமைகளை, வறிய மக்களின் வாழ்வாதார எழுச்சியை, நிலமற்ற, வீடற்ற மக்களின் பிரச்சினைகளை, சமூக சமத்துவ நீதியை, பெண்களின் சமத்துவ உரிமையை, வேலையற்ற இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புகளை, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய சிந்தனையை, அபிவிருத்தியில் தமிழர் தேசத்திற்கான சமத்துவ உரிமையை, எமது எண்ணங்களில் இடையறாது சுமந்து செயலாற்றிய படியே அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்விற்காகவும் நாம் யதார்த்தமாகச் சிந்தித்து உழைத்தும் வருகின்றோம்.

இத்தகைய பன்முகச்சிந்தனை செயற்பாடுகளையும், அன்றாட இடர் தீர்ப்பு, அபிவிருத்தி, அரசியலுரிமை, என்ற எமது உயரிய இலட்சிய செயற்பாடுகளையும் உதறித்தள்ளி விட்டு, வெறும் பேச்சளவில் மட்டும் அரசியலுரிமை என்ற வேற்று வேட ஒற்றைப்புத்தியில் தாமும் மயங்கி, மக்களையும் மயக்க எத்தனிப்பவர்கள் இன்று, விலை வாசி உயர்வென்றும், மின்சாரம், எரிபொருள் இல்லையென்றும் வெற்று வேடக்கூச்சலிடுவது வேடிக்கையானது.

உணவும் தேவை, உரிமையும் தேவையென எமது மக்களின் உணர்வெழுச்சியாக உறுதியுடன் உழைத்துவரும் எம்மை சலுகைகளுக்காகக் கையேந்துவோர் எனப் பரிகாசம் செய்தவர்கள், சோறா? சுதந்திரமா? எனக் கேட்ட போது, சோறு வேண்டாம், சுதந்திரமே வேண்டுமென வெறும் சுயலாபங்களுக்காகச் சூளுரைத்தவர்கள், இன்று, அரிசி விலை, பருப்பு விலை என்று அழுது வடிப்பதை நீலிக்கண்ணீர் என்று சொல்வதா?

அல்லது, சோறும் தேவை சுதந்தரமும் தேவையெனச் சொன்ன எமது அரசியல் வழிமுறையை இன்றாவது ஏற்கிறார்கள் என அர்த்தமா? இன்றைய பொருளாதார நெருக்கடிகளைச் சகல மக்களும் எதிர்கொள்ளும் அன்றாட இடர்களில் ஒன்றாக எண்ணியே நாம் துயர் கொள்கிறோம்.

விலை வாசி உயர்வாலும், பொருட்களுக்கான தட்டுப்பாடுகளாலும் தொடர்ந்தும் எம் தேசம் வீழ்ந்து கிடக்காது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி முரண்பாடுகளும், வழமையான ஆட்சி மாற்றக் கனவுகளும், குழப்பங்களும் அரசியல், பொருளாதார மாற்றங்களைத் தந்து விடாது.

சகல மக்களினதும் பொருளாதார மீட்சியே இன்று அவசியம், நலிவடைந்த மக்களின் நம்பிக்கை குரலாகவும், தமிழர் தேசத்தின் தலை நிமிர்வு நோக்கிய செயலாகவும், உழைக்கும் மக்களின் உணர்வாகவும், ஜனநாயக முற்போக்கு சக்திகளின் வழி காட்டலாகவும், இன்று நாமே செயலாற்ற வேண்டிய கட்டாய கட்டளையை வரலாறு எம் மீது சுமத்தியுள்ளது. உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லட்டும்!

தமிழர் தேசம் தலை நிமிரட்டும்!! சகல மக்களினதும் சம கால இடர்கள் நீங்கட்டும்!!! நாம் செல்லும் பயணம் வெல்லும்! மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! வெல்வோம், முயல்வோம், உளம் சோரோம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US