பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரான்ஸ் தமிழர்கள்
ஈழத்தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்பிகாவிற்கு ஆதரவாக பிரான்ஸ் லாச்சப்பலில் தமிழர்களால் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் பல தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டு அம்பிகாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர்.
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஈழ்த்தமிழருக்கு நீதிகோரி அம்பிகா உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.