நாட்டில் சுதந்திரம் இல்லை! ஏன் சுதந்திர தினத்தை கொண்டாடப் போகின்றார்கள்: விமல் ரட்நாயக்க கேள்வி
நாட்டில் சுதந்திரம் இல்லை, ஏன் சுதந்திர தினத்தை கொண்டாடப் போகின்றார்கள் என தெரியவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இன்று (20.01.2023) இந்த விடயத்தினை அவர் வினவியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்போது சிறையில் அடைத்திருக்கிறீர்கள். பல இளைஞர்கள் யுவதிகள் சிறையில் வாடுகின்றார்கள்.

ஜனநாயக உரிமை
இந்நிலையில் நாட்டில் தற்பொழுது சுதந்திரம் இல்லை, போராடுவதற்கு ஜனநாயக உரிமை இல்லை, போராட்டக்காரர்கள் கொடூரமாக அடக்கப்படுகின்றார்கள்.
அவ்வாறான நிலையில் சுதந்திர தினம் தேவைதானா முதலில் அவர்களுக்கு விடுதலையை கொடுங்கள் அதன் பிறகு நீங்கள் சுதந்திரத்திர தினத்தை கொண்டாடலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்
தற்பொழுது பெருமளவு நிதியினை செலவழித்து சுதந்திர தினம் தேவைதானா என அனைவரும் கேள்வி எழுப்புகின்றார்கள்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் அடிப்படையில் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.
கடந்த வருடம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்ட சபைகளுக்கான தேர்தல் கட்டாயமாக மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam