அடுத்த ஆண்டு சில நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்
பொருட்களை பரிமாறிக்கொள்வது சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு சில நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் பங்களாதேஷூடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்

இதனடிப்படையில், முதல் கட்டமாக இந்தியா, சீனா, தாய்லாந்து நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக பங்களாதேஷூன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள், இலங்கைக்கு ராஜதந்திர மட்டத்தில் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளதுடன் இதற்காக இலங்கை அரசாங்கம் முன்வைத்த யோசனையை தாய்லாந்து அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது
இதற்கு அமைவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சம்பந்தமாக தாய்லாந்து அரசின் பிரதானிகளுடன் எதிர்வரும் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் இலங்கையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

இதனை தவிர கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பங்களாதேஷூடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்வது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷூடனான இந்த பேச்சுவார்த்தை சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக செயலகத்தின் ஊடாக தொடர்ந்தும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் சம்பந்தமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri