அதிவேக நெடுஞ்சாலையில் ராஜபக்ஷர்களுக்கு இலவசம்
அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு தொடரணிக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க கூடிய வகையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நோயாளர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து நோயாளர் காவு வண்டிகளும் அதிவேக நெடுஞ்சாலையை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.