மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் குறித்த தகவல்களை, தமது சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தகைய தகவல்களை சிறப்பு புலனாய்வுப் பிரிவில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு 0112 882228 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் என்று பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக பொலிஸ் பிரிவுக்கு ஏற்கனவே ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்குள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற ஒரு பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் துபாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி கிரிபத்கொடையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடமிருந்து ரூ. 800,000 பெற்ற ஒரு பெண்ணும், குருநாகலில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு நேர்காணலை நடத்திய மற்றொரு நபரும் அடங்குவர்.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
