வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நடக்கும் மோசடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
குறித்த மக்களிடம், மருத்துவ சான்றிதழுக்கான கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அதிகரித்த கட்டணம்

18 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரையில் இதற்கான கட்டணங்கள் அறவிடப்படுவதுடன், தர சேவைக் கட்டணங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன.
அதிகளவான கட்டண அறவீடு தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் செயலாளர் எம்.எஃப்.எம் அர்ஷாத் தெரிவிக்கிறார்.
இலங்கையில் 14 கிளினிக்குகள்

வேலைக்காக அல்லது வசிப்பதற்காக மேற்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் எவருக்கும் புறப்படுவதற்கு முன் உடல்நலப் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த பரிசோதனைகளை நடத்துவதற்கு இலங்கையில் 14 கிளினிக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan