அமெரிக்க வங்கிகளில் இருந்த தொன் கணக்கான தங்கம் விற்பனை: பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம்!
உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைதியான ஆனால் சக்திவாய்ந்த மூலோபாய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
2025-2026 காலப்பகுதிக்குள்இ அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மத்திய வங்கி காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 129 தொன் தங்கத்தை விற்று அந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஐரோப்பாவில் புதிய தங்கத்தை வாங்கி அதனை பிரான்சுக்கு மாற்றியுள்ளார்.
இது ஒரு புதிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மறுசீரமைப்பாகக் கருதப்படுகிறது.
புவிசார் அரசியல் பின்னணி
இன்று உலகம் புவிசார் அரசியல் ரீதியாக பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது. குறிப்பாக ரஷ்யா-உக்ரேன் போர் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம் மற்றும் புதிய அதிகாரக் குழுக்களின் எழுச்சி போன்ற காரணிகளுக்கு மத்தியில் நாடுகள் தங்களது பொருளாதார பாதுகாப்பை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இந்தப் பின்னணியில் அமெரிக்காவில் இருந்த தங்க இருப்புகளை பிரான்ஸ் மறுசீரமைத்தமையானது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பூகோலவியல் அரசியல் மோதல்களில் பொருளாதாரம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

2022 முதல் நிலவும் ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இதன் மூலம் வெளிநாட்டு வங்கி அமைப்புகளில் வைக்கப்பட்டுள்ள கையிருப்புகளை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம் என்பது நாடுகளுக்குத் தெளிவாகியது.
உலகின் முக்கிய நிதி மையமாக அமெரிக்கா இன்னும் செயல்பட்டு வருகின்றது. எனினும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து நாடுகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
பிரான்சின் முடிவின் அர்த்தம்
பிரான்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு பழைய தங்கக் கட்டிகளை (gold bars) ) புதிய உயர்தர சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது போலத் தெரிந்தாலும் இது உண்மையில் ஒரு ஆழமான பொருளாதார மறுசீரமைப்பாகவே கருதப்படுகிறது.

பூகோலவியல் அரசியல் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாடுகள் தங்களது வளங்களைத் தங்களது சொந்த மண்ணிலேயே வைத்திருக்க முனையும் போக்கு தற்போது அதிகரித்து வருகின்றது.
இருப்புக்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் பிராந்தியமயமாக்கல் ஆகியவை முன்னுரிமை பெறும்போதே இதற்கு காரணமாகும்.
ஈரானுக்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை! விரைவில் நல்ல செய்தி - தீவிர பேச்சுவார்த்தையில் ட்ரம்ப்
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri