தீக்கிரையான பிரான்ஸ் அதிவேக தொடருந்து பாதைகள்
2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் (France) பல அதிவேக தொடருந்து பாதைகளுக்கு தீ வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிஸில் இருந்து மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி செல்லும் அதிவேக தொடருந்து பாதைகளில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தின் காரணமாக தொடருந்து போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 800,000 பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள்
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26) தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த போட்டிகளுக்கான தொடக்க விழா ஆரம்பமாக சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பமை திட்டமிட்ட செயல் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
