பிரான்சில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை
பிரான்சில் ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கோவிட் -19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கோவிட் - 19 பாதிப்பு விகிதங்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கான கட்டாய முகக்கவச விதிமுறையை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் நிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது பிரான்சில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 10,000 இற்கு மேல் கோவிட் தொற்று பதிவாகி வரும் இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.