பிரான்ஸில் விசா இல்லாதவர்களை தேடும் பொலிஸார் - வீடுகளில் பதுங்கியுள்ள தமிழர்கள்
பிரான்ஸில் ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்யும் விசேட சோதனை திட்டம் ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆவணங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக விசா இல்லாமல் பிரான்ஸில் பணியாற்றும் தமிழர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சு
இந்த சோதனை நடவடிக்கைக்காக சுமார் நான்காயிரம் பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் கடுமையான குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்தி வரும் உள்துறை அமைச்சு, ஆவணங்கள் இல்லாதவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுபோன்று ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 700 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
