பிரித்தானிய கடல் எல்லைக்குள் அத்துமீறும் பிரான்ஸ்
பிரான்சிலிருந்து புலம்பெயர்வோர் பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்ஸ் எல்லை பாதுகாப்புப் படைக்கு 54 மில்லியன் பவுண்ஸ் கொடுத்த பின்னரும், மீண்டும் பிரெஞ்சு கடற்படை புலம்பெயர்வோரை பிரித்தானிய எல்லைக்குள் கொண்டு விட்டுச் சென்ற அராஜகத்தை இன்று காணமுடிந்தது.
GB News என்னும் தொலைக்காட்சி இந்த சம்பவத்தை படம்பிடித்துள்ளது.அந்த வீடியோவில், செய்தியாளர் ஒருவர், பிரெஞ்சு கடற்படையைச் சேர்ந்த ஒரு கப்பல், புலம்பெயர்வோர் அமர்ந்திருக்கும் ஒரு படகுடன் பிரித்தானியா நோக்கி வருவதை சுட்டிக் காட்டுகிறார்.
கப்பல்களை ட்ராக் செய்யும் இணையதளம் ஒன்று, இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறிய படகுகள் பல, புலம்பெயர்வோரை அழைத்து வருவதற்காக பிரெஞ்சு கடல் எல்லைக்கருகில் செல்வதை காட்டியுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,