இலங்கையின் கிராமம் ஒன்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரிகள்
யக்கல வரெல்லவத்தை பிரதேசத்தில் நரிகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யக்கல ஹெட்டியதெனிய, மிரிஸ்வத்த, ஹன்சகிரிய முதலான பகுதிகளில் சில மாதங்களாக நரிகளின் நடமட்டாம் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் விவசாயம் செய்யப்படாத நெல் வயலை ஒட்டியுள்ள வனச்சூழலில் இருந்து இந்த நரிகள் கிராமத்திற்கு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குள்ளநரிகளின் பயம் காரணமாக, அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதி மக்கள் தினமும் காலையில் பட்டாசுகளை கொளுத்தி வேலைக்குச் செல்கின்றனர்.
இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam