மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் தரமுயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் 1C தரப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளுக்கான க.பொ.த உயர்தரப் பிரிவுகள் நேற்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது..
இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய மேற்படி பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி பன்சேனை பாரி வித்தியாலயம், கோரகல்லிமடு ரமணமகரிசி வித்தியாலயம், காயங்கடா கண்ணகி வித்தியாலயம், உன்னிச்சை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளன.