திருகோணமலையில் விபத்து: நால்வர் படுகாயம்(Photos)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (22) பிற்பகல் திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முச்சக்கர வண்டி வந்த பாதையில் இருந்து வலப்புறப்பக்கமாக திரும்புவதற்காக திருப்பப்பட்ட போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சிசிடிவி காணொளி மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையில் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri