நள்ளிரவில் திருமண வீடொன்றில் இடம்பெற்ற குழப்பம்! நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை -எத்தாபெந்திவெவ பகுதியில் திருமண வீடொன்றில் இடம்பெற்ற கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருமண வீட்டில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு பியர் போத்தலினால் மற்றுமொரு இளைஞர் தாக்கியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகனும் காயமடைந்துள்ளதுடன் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஆர்.ஏ.சீ.பீ.ரணசிங்க (35வயது) ஏ.ஆர்.தேதுனு (20வயது) மற்றும் எஸ்.எஸ்.ஹேமச்சந்ரா (59வயது) அவருடைய மகன் டி.என்.எஸ்.விஜயகோன் (25வயது) எனவும் தெரிய வருகிறது.
குறித்த மோதல் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
