வெள்ளைப்பூண்டு விவகாரம்! - மேலும் நால்வர் அதிரடியாக கைது
வெள்ளைப்பூண்டு ஊழல்' தொடர்பாக சதோசாவைச் சேர்ந்த மேலும் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் நாளை (12) வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி லங்கா சதோசாவுக்கு சொந்தமான 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை எடுத்துச் சென்ற இரண்டு கொள்கலன்கள் கெரவலப்பிட்டியில் வைத்து கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் இரண்டு நாட்களுக்குப் பிறகு சதோசாவின் துணை பொது முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் சம்பவம் தொடர்பாக லங்கா சதோசாவின் நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அக்டோபர் 06 அன்று, குற்றப் புலனாய்வுத் துறை வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக மற்றொரு சந்தேக நபரை பம்பலப்பிட்டியில் வைத்து கைது செய்தது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
