மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி
மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 93 பேருக்கு நேற்று பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் மேலும் நான்கு உத்தியோகத்தர்கள் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் கோவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரையில் கோவிட்-19 தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புகளைப்பேணிய 30க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
