மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி
மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 93 பேருக்கு நேற்று பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் மேலும் நான்கு உத்தியோகத்தர்கள் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் கோவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரையில் கோவிட்-19 தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புகளைப்பேணிய 30க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam