யாழில் பிறந்து நான்கு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழப்பு!
யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சஜித்தீபன் கிஷாரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி நான்கு மாதங்களில் ஏற்றப்படும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

ஊசி ஏற்றப்பட்ட பின்னர் குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அரைமணிநேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.
உடற்கூற்று மாதிரிகள்
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri