இலங்கையில் இரவில் நடந்த பயங்கரம்! தீ விபத்தில் நால்வர் பலி
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து நேற்று இரவு (07) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, நகரசபை ஊழியர்கள் இரண்டாவது எரிவாயு தொட்டியை பாதுகாக்க முடிந்தமையால், மேலும் அழிவுத் தடுக்கபட்டுள்ளது.
வெடிப்பு நிகழ்ந்த சுமார் 2 1/2 மணி நேரத்திற்குப் பிறகே, தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம்
அந்த நிலையத்தில் LP எரிவாயுவை நிரப்ப வாகனம் ஒன்று வந்தபோது இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது, அந்த இடத்தில் இருந்த இரண்டு எரிவாயு தொட்டிகளில் ஒன்று - ஒவ்வொன்றும் சுமார் 6,000 லிட்டர் எரிவாயுவைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எரிவாயு நிரப்பும் பணியின் போது வெடிப்பு ஏற்பட்டு அந்த பகுதியே தீப்பிடித்து எரிந்ததாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பயிற்சி பெறாத ஒரு தொழிலாளி எரிவாயு பரிமாற்ற நடைமுறையை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எரிபொருள் நிலைய மேலாளர் மற்றும் பல தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் எரிபொருள் நிரப்பும் செயல்முறையை நிர்வகிக்க முயன்றபோது, தொட்டி வெடித்ததால் அவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான தீக்காயங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
குருநாகல் நகர சபை, குருநாகல் பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவத்தின் அவசரக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - இந்திரஜித்

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
