வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் படுகாயம்
வவுனியா (Vavuniya) - செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (16.08.2024) செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை சம்பவம் நடந்த வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி அத்துடன் அந்த வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
