வீடுகளிலேயே நால்வர் மரணம்! - பொலிஸார் வெளியிட்ட தகவல்
மினுவாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நான்கு பேர் ஆகஸ்ட் 23ம் திகதி தங்களின் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். பென்சில்கொட, கட்டுவெல்லேகம மற்றும் அரங்காவா போன்ற பகுதிகளில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஓபாதாவில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாதுபிடிவெல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸுடன் இணைந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் மூவர் 74 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், மற்றையவர் 43 வயதுடைய ஆண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மீள் விசாரணை நடத்தப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam