ஹெரோயினுடன் யுவதி உட்பட நால்வர் கைது
போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் போது யுவதி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட நகரில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 05 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகொட பகுதியைச் சேர்ந்நத 45 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவில் 05 கிராம் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய பாணந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் 04 கிராம 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேனமுல்லைப் பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 02 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 57 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
