யாழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம்(Jaffna) - ஆனைக்கோட்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்று(10.06.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாளுடன் கைதான பிரதான சந்தேகநபரை மேலும் இரண்டு நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரியுள்ள நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம்(Jaffna) - ஆனைக்கோட்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நேற்று முன்தினம்(09) நால்வர் பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan