கஞ்சாவுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வரையும் எதிர்வரும் (11.1.2022) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடற்படையினரின் தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நேற்று முன்தினம் (30. 12. 21) 89 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு சந்தேக நபர்களும் நேற்று (31.12.21) நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மூவர் மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களில், சமூக மட்ட அமைப்புக்களில் பங்கு வகிக்கும் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
