சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் நால்வர் கைது
பகிடிவதை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவர், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாகவே அவர் தவறான முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
விசாரணைகள்
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.
விசாரணைகளின் அடிப்படையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை(04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
