அனுரவுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இணைந்தமைக்கு கடும் கண்டனம்
தேசிய மக்கள் சக்தியில் (NPP) முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இணைந்தமைக்கு ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் குழு, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
இதனையடுத்து, ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (14.06.2024) உரையாற்றிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, 150 வருடங்கள் பழமையான வரலாற்றைக் கொண்ட பொலிஸ் திணைக்களத்தை, அரசியலுக்குள் கொண்டு வந்து அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஜேவிபியின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதே உத்தியோகத்தர்கள், அதே கட்சியில் இணைந்தமை கண்டு, தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்காத குற்றப் புலனாய்வுப் பிரிவின், குறித்த பிரதான அதிகாரிகள் இருவரும், வவுணத்தீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலைச் சம்பவம் தொடர்பில், சஹ்ரான் குழுவினரை கைது செய்யாமல், விடுதலைப் புலிகள் மீது குற்றத்தை சுமத்தி விசாரணைகளை முடித்துக்கொண்டதாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க, ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் நோர்டன் டி சில்வா, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க, ஓய்வுபெற்ற அத்தியட்சகர் சேனக குமாரசிங்க, ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ஹேரத் மற்றும் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri