முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம்
முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து, நேற்று (07.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் முள்ளிவாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரின் சில்லொன்றில் காற்று குறைவடைந்ததன் காரணமாக திடீரென வீதியை விட்டு விலகி சென்று விபத்து இடம்பெற்றிருந்தது.
சேதம் ஏற்படவில்லை
விபத்து ஏற்படும் போது, அவரது துணைவியாரும் காரில் பயணித்திருந்தார். எனினும், காரில் பயணித்த எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |