வத்தளையில் இரு இளைஞர்கள் கைது
வத்தளை - ஹெந்தல, எலகந்த பிரதேசத்தில் மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 3 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 31 வயதுடைய சேதுவத்தை மற்றும் மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |