கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை: வெளியானது பெயர் விபரம்

Canada Gun Shooting
By Dharu Mar 08, 2024 01:37 PM GMT
Report

புதிய இணைப்பு

கனடா - ஒட்டோவா படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் விபரங்களை கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த படுகொலை தொடர்பில் கனேடிய பொலிஸார்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலைசெய்யப்பட்ட குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் கண்டுள்ளோம்.

அமெரிக்காவே இலக்கு: சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கவைத்த வடகொரியாவின் நகர்வு

அமெரிக்காவே இலக்கு: சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கவைத்த வடகொரியாவின் நகர்வு

பெயர் விபரம்

சந்தேகத்தின் பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளோம்.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை: வெளியானது பெயர் விபரம் | 5 Killed In Sudden Shooting In Canada

ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகன்யக (35) - தாய், இனுக விக்ரமசிங்க (7) - மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) - மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோரே  உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளார்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டோவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

முதலாம் இணைப்பு

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 06 பேரும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் தலைநகர் ஒட்டோவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள் உட்பட 6 ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் படுகாயமடைந்த ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை: வெளியானது பெயர் விபரம் | 5 Killed In Sudden Shooting In Canada

குற்றத்தை செய்தவர்கள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த மரணங்கள் உள்நாட்டு அல்லது நெருக்கமான வன்முறையின் விளைவாக இருக்கலாம் என ஒட்டோவா பொலிஸார் கூறியுள்ளனர்.

முதலாம் இணைப்பு

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் திடீரென குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

துப்பாக்கி சூடு சம்பவம்

“துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வந்த தகவலின் பேரில் விரைந்தோம். தான்கிரெட் தெருவில் 41 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை: வெளியானது பெயர் விபரம் | 5 Killed In Sudden Shooting In Canada

தொடர்ந்து 10 நிமிடங்களில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே சென்று பார்த்தபோது, துப்பாக்கி சூட்டிற்கான காயங்களுடன் 45 மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

மேலும், 6 மற்றும் 12 வயதுடைய 2 சிறுவர்களின் உடல்களும் காணப்பட்டன. அவர்களும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளமை அடையாளம் காணப்பட்டது.

பின்னர், 44 வயது கொண்ட மற்றொரு நபரின் உயிரற்ற உடலும் கைப்பற்றப்பட்டது.

புதிய ஜனாதிபதி விடயத்தில் குழப்பத்தில் இந்தியா

புதிய ஜனாதிபதி விடயத்தில் குழப்பத்தில் இந்தியா

பொலிஸ் விசாரணை

இந்நிலையில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளமை தெரியவந்தது.'' என்று தெரிவித்துள்ளனர்.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை: வெளியானது பெயர் விபரம் | 5 Killed In Sudden Shooting In Canada

இதன்படி இந்த மரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. கடந்த மாதம் ஒட்டோவாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு நேர்ந்த துயரம்

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US