மனுஷவின் செயலாளர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு தடை
அதன்படி, சந்தேக நபரை தலா 2.5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் செல்லவும், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 14 நிமிடங்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
