நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு!வெளியான காரணம்
நாட்டில் காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, 15 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களே காயங்கள் காரணமாக பெரும்பாலும் உயிரிழக்கின்றனர்.
அடிப்படை முதலுதவி
இவ்வாறான காயங்கள் பெரும்பாலும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியாக செயற்படுவதன் மூலம் தவிர்க்கக்கூடியவை.
குறிப்பாக, காயங்கள் ஏற்பட்டதும் உடனடியாக அடிப்படை முதலுதவி அளிப்பது மனித உயிர்களை காப்பாற்றுவதிலும் சிக்கல்களை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகத் துறையினரும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
விபத்துகளின் மூலக் காரணங்களைப் பற்றியும், முதலுதவியின் அவசியத்தை பற்றியும் மக்களிடையே எடுத்துரைப்பது பாதுகாப்பான சமுதாயத்திற்கான கட்டமைப்பை உருவாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்வெளிகள்! விமான டிக்கெட்டுகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள்: இஸ்ரேல் முழுவதும் ஒலிக்கும் அபாய எச்சரிக்கை ஒலிகள்
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி: ஓய்வூதியக் கணக்குகளில் அவசரத் தேவைக்காகப் பணம் எடுப்பவர்கள் அதிகரிப்பு
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri