கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்

Keheliya Rambukwella Sri Lanka Crime
By Sivaa Mayuri Dec 01, 2024 08:56 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

நாட்டில் நிலவிய மருந்துப் பற்றாக்குறைக்கு மத்தியில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு, அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கியதாக முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 13 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் சாட்சியங்களை முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹாகம இதனை குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி அநுர வடக்கில் இராணுவத்தை வெளியேற்ற காரணம்..!

ஜனாதிபதி அநுர வடக்கில் இராணுவத்தை வெளியேற்ற காரணம்..!

அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி

குறிப்பிட்ட விசாரணை தொடர்பில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதுவரை 13 அமைச்சரவை அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.

கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம் | Former Ministers Approval Confidence Keheliya

ரம்புக்வெல்லவின் மீது நம்பிக்கை கொண்டே, நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலைமையை கருத்திற்கொண்டு, குறித்த மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

மருந்து பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கத்தில், ரம்புக்வெல்ல பொய்யான தகவல்களை முன்வைக்கிறார் என்பதை அறிந்திருந்தால், அமைச்சரவைப் பத்திரத்தை தாங்கள் எதிர்த்திருப்போம் என அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

13ஆம் திகதி வரை விளக்கமறியல்

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திரான் அலஸ் ஆகியோரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாக வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட பிரதி மன்றாடியார் நாயகம், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, வாக்குமூலம் வழங்குவதற்கு வேறொரு திகதியை கோரியுள்ளதாகவும் மன்றில் தெரிவித்துள்ளார்.

கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம் | Former Ministers Approval Confidence Keheliya

விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் அபேவிக்ரம, முதலாவது சந்தேகநபரான சுதத் ஜானக பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் தற்போது பிணையில் உள்ள சகல சந்தேக நபர்களையும் பெப்ரவரி 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US