கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்

Keheliya Rambukwella Sri Lanka Crime
By Sivaa Mayuri Dec 01, 2024 08:56 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

நாட்டில் நிலவிய மருந்துப் பற்றாக்குறைக்கு மத்தியில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு, அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கியதாக முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 13 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் சாட்சியங்களை முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹாகம இதனை குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி அநுர வடக்கில் இராணுவத்தை வெளியேற்ற காரணம்..!

ஜனாதிபதி அநுர வடக்கில் இராணுவத்தை வெளியேற்ற காரணம்..!

அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி

குறிப்பிட்ட விசாரணை தொடர்பில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதுவரை 13 அமைச்சரவை அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.

கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம் | Former Ministers Approval Confidence Keheliya

ரம்புக்வெல்லவின் மீது நம்பிக்கை கொண்டே, நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலைமையை கருத்திற்கொண்டு, குறித்த மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

மருந்து பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கத்தில், ரம்புக்வெல்ல பொய்யான தகவல்களை முன்வைக்கிறார் என்பதை அறிந்திருந்தால், அமைச்சரவைப் பத்திரத்தை தாங்கள் எதிர்த்திருப்போம் என அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

13ஆம் திகதி வரை விளக்கமறியல்

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திரான் அலஸ் ஆகியோரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாக வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட பிரதி மன்றாடியார் நாயகம், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, வாக்குமூலம் வழங்குவதற்கு வேறொரு திகதியை கோரியுள்ளதாகவும் மன்றில் தெரிவித்துள்ளார்.

கெஹலியவிற்கு எதிரான வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம் | Former Ministers Approval Confidence Keheliya

விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் அபேவிக்ரம, முதலாவது சந்தேகநபரான சுதத் ஜானக பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் தற்போது பிணையில் உள்ள சகல சந்தேக நபர்களையும் பெப்ரவரி 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US