விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் தகவல்
தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுவதால், பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று மஹிந்த அமரவீர பரிந்துரைத்துள்ளார்.
பயிர்களுக்கு ஏற்படும் சேதம்
சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் நடத்தப்படும் திட்டமிடப்பட்ட ஊடக காட்சிகளில் கவனம் செலுத்துவதை விட, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் மூன்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட உயிரியல் பூங்காக்களுக்காக இலங்கையின் 100,000 டோக் மக்காக்களை கோரினர்.
திட்டம் தொடர்பான ஆவணங்கள் பரிமாறப்பட்டன. இருப்பினும், திட்டம் தொடங்கும் போது, பல சுற்றுச்சூழல் அமைப்புகள் அதற்கு எதிராக செயற்பட்டன.
இதன் விளைவாக, அந்த திட்டத்தை தொடர முடியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார், அங்கு அவர் இது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முடியும். இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க சீனா மற்றும் பிற நாடுகளுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யலாம்.
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விவசாயிகள்
இந்த முயற்சியானது தூதரக உறவுகளை வலுப்படுத்தலாம். அத்துடன் இந்த விலங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
டோக் மக்காக்கள், குரங்குகள், முள்ளம்பன்றிகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில்கள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும், இந்த விலங்குகள் சீனா போன்ற நாடுகளில் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகின்றன.
உதாரணமாக, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், கங்காருக்களைப் பார்த்து மகிழ்கிறோம், ஆனால் அவுஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ சின்னமாக கங்காரு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அந்த நாடு அண்மையில் மில்லியன் கணக்கான கங்காருக்களை அழித்துள்ளது.
இந்த நிலையில்,விலங்குகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விவசாயிகளின் கிராமங்களில் நேரத்தை செலவிடுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினார்.
அவர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டால், குறித்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை கைவிட்டு நகர்ப்புறங்களுக்குச் சென்று, முச்சக்கர வண்டிகளை ஓட்டுவது போன்ற வேலைகளிலேயே ஈடுபடுவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
