முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று(08.07.2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று(08) காலை இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்ட இவர், தலா ரூ. 5 மில்லியன் பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை, இன்று(08.07.2026) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது மற்றும் முன்னாள் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
you may like this video
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri