ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளர் காலமானார்
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முறைசாரா கல்விப்பிரிவின் முன்னாள் பிரதி பணிப்பாளருமான த.மாசிலாமணி காலமானார்.
சுகவீனம் காரணமாக இன்று காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் ஆசிரியராகவும் வேறு பாடசாலைகளில் அதிபராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றிய அவர், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முறைசாரா கல்விப்பிரிவின் உருவாக்கத்தின் காரணகர்த்தாவாகவும் இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டியவர்.
அரசியல் நீரோட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலில் இணைந்த அவர் 2012ஆம்
ஆண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்
தெரிவுசெய்யப்பட்டு அரசியல் மூலம் தனது சேவையாற்றியவர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 9 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!