உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின் இரண்டு மாதங்களில் அரசாங்கத்தை அமைப்போம்-அனுரகுமார திஸாநாயக்க
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் அரசாங்கத்தை அமைக்க போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் கலாவெவ தொகுதியின் அதிகார சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை பெற்று நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மாத்திரம் தயாராக இருக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை பெற்று நாட்டை கட்டியெழுப்பவும் தயாராக இருக்கின்றது.
தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தவில்லை என்றால் போராடியேனும் தேர்தலை பெற்றுக்கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலவில் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்தை அமைப்போம். அதன் பின்னர் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரம்! மைக்கேல் ராபர்ட்ஸ் என்பவரால் வெளியிட்டுள்ள தகவல்கள்
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri